;
Athirady Tamil News

க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு

0

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை தொடரும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன் , தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிக்மி மற்றும் ஊபர் சாரதிகள் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்கத் தவறிய பொலிஸ்
பிக்மி மற்றும் ஊபர் சாரதிகள் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்கத் தவறிய பொலிஸ்
அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்கள் மார்ச் 7 ஆம் திகதி முதல் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk ஐப் பார்வையிட்டு அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.