;
Athirady Tamil News

லொரியும் பேருந்தும் மோதி கோர விபத்து – பலர் வைத்தியசாலையில்

0

மூதூர் பகுதியில் இன்று (01) பேருந்தும் லொரியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மினுவங்கொடவிலிருந்து சேருவில பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் லொரியும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய 33 பேரில் 18 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்துள்ளவர்கள் தற்போது மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.