;
Athirady Tamil News

சைக்கிள் மீது மோதிய கார்: ஒருவர் பலி

0

காலி – கொழும்பு வீதியில் பலப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த சைக்கிள் ஒன்று மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என்பதுடன், விபத்தின் போது படுகாயமடைந்த குறித்த நபர் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.