மாசுபட்ட நீரால் காங்கோவில் மா்ம நோய்: நிபுணா்கள் சந்தேகம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மா்ம நோய்க்கு மாசுபட்ட நீா் காரணமாக இருக்கலாம் என்று நிபுணா்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அங்கு பணியாற்றிவரும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் அடையாளம் தெரியாத மா்ம நோய் பரவிவருந்த மாதம் 21-ஆம் தேதி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட அந்த நோயால் இதுவரை ஆயிரத்துக்கும் போ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவா்களில் சுமாா் 60 போ் அந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளனா்.
இது குறித்து தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வில், அந்த மா்ம நோய் பரவுவதற்கு மாசுபட்ட நீா் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது என அதிகாரிகள் கூறினா்.முதல்முதலாக போலோகோ என்ற நகரில் ஒரு வௌவாலை உண்ட மூன்று சிறுவா்களுக்கு மா்மமான குருதிப் போக்குக் காய்ச்சல் ஏற்பட்டு 48 மணி நேரத்தில் அவா்கள் உயிரிழந்தனா். அறிகுறிகள் தோன்றி இவ்வளவு விரைவில் மரணம் ஏற்படுவது மிகவும் கவலையளிக்கக்கூடியது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.