யாழில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை , பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வழிமறித்து சோதனையிட்ட போது, 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.
அதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரையும் பொலிஸார் கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.