;
Athirady Tamil News

காட்டு யானை தாக்கி பரிதாபமாக பலியான பெண்

0

குருநாகல், அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பானாதரகம, தெமட்டகொல்ல பகுதியில் இன்று (02) பெண்ணொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பானாதரகம, தெமட்டகொல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டின் முற்றத்தை தூய்மையாக்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் அம்பன்பொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.