;
Athirady Tamil News

நாட்டில் நிலவும் எரிபொருள் இருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

0

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இன்று காலை வரை மட்டுமே இருக்கும் என்ற எரிபொருள் விநியோகஸ்தர்களின் கூற்றுகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) மறுத்துள்ளது.

நாடு முழுவதும் இன்று 1,581 ஓர்டர்கள் பெறப்பட்டுள்ளதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாலும் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

விநியோகஸ்தர்கள் கூறுவது போல் இன்று எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட எந்த காரணமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நாட்டில் மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் ஓகஸ்ட் மாதம் வரை ஏற்கனவே ஓர்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.