;
Athirady Tamil News

கையடக்கத் தொலைபேசிகளுடன் வர்த்தகர் கைது

0

இலங்கைக்கு 3 கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான வர்த்தகர் துபாயிலிருந்து இன்று (04) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 111 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.