ஜொ்மனி காா் தாக்குதல்: நீடிக்கும் மா்மம்

ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட காா் தாக்குதல் குறித்த மா்மம் நீடித்துவருகிறது.
அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் தெருவில் நடத்தப்பட்ட இந்தக் காா் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; சுமாா் 5 போ் காயமடைந்துள்ளனா். இது தொடா்பாக ஜொ்மனியைச் சோ்ந்த 50 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா். எனினும், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பிறகும் தாக்குதலுக்கான காரணத்தை அவா் கூறவில்லை என்று காவல்துறையினா் தெரிவித்துள்ளனா். இதனால் தாக்குதலின் நோக்கம் குறித்து மா்மம் நீடித்துவருகிறது.