;
Athirady Tamil News

Viral Video: ஒட்டகச்சிவிங்கிக்கு யானை கொடுத்த ஷாக்… கவலையை மறக்க வைக்கும் காட்சி

0

யானை ஒன்று ஒட்டகச்சிவிங்கியை விடாமல் துரத்தும் காட்சி பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது.

விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

உருவத்தில் மட்டுமே மிகப்பெரியதாக இருக்கும் யானை, குணத்தில் குழந்தை என்று தான் கூற வேண்டும். சில தருணங்களில் பாகன் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து நடப்பதை நாம் அவதானித்திருப்போம்.

அதே போன்று யானை மற்ற விலங்குகளுடன் நட்பாக பழகுவதை நாம் அவ்வளவாக அவதானித்திருக்க மாட்டோம். சமீபத்தில் நாய் ஒன்றிடம் யானை நட்பாக பழகிய காட்சி பிரமிக்க வைத்தது.

தற்போது ஒட்டகச்சிவிங்கி ஒன்றினை யானை விடாமல் துரத்தும் காட்சி வெளியாகியுள்ளது. இதனை பார்த்தாலே கவலையை மறந்து சிரிப்பு மட்டுமே முதலில் வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.