;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி

0

ஏப்ரல் மாதம் முதல், சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கான விதிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன.

பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி

ஆண்டொன்றிற்கு சுமார் ஒரு மில்லியன் சுவிஸ் நாட்டவர்கள் பிரித்தானியாவுக்குப் பயணிக்கிறார்கள்.

அவர்கள் அதிகம் பயணிப்பது லண்டனுக்குதான். ஆக, ஆண்டொன்றிற்கு ஜெனீவாவிலிருந்து லண்டனுக்கு சுமார் 2 மில்லியன் சுவிஸ் நாட்டவர்கள் பயணிக்கிறார்கள்.

விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிக்கும் பயணிகள், இனி, electronic travel authorisation (ETA) என்னும் மின்னணு பயண அங்கீகாரம் ஒன்றைப் பெறுவது கட்டாயமாகும்.

இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த மின்னணு பயண அங்கீகாரத்துக்கான கட்டணம் 11.50 சுவிஸ் ஃப்ராங்குகள் ஆகும்.

பிரித்தானிய மற்றும் அயர்லாந்து பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உட்பட சில தரப்பினருக்கு மட்டுமே இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.