;
Athirady Tamil News

மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆப்கன் நாட்டினர் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும்

0

மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஏஆர்ஒய் செய்திகளின்படி, ஆப்கானிஸ்தான் குடியுரிமை அட்டை வைத்திருப்பவர்கள் தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இல்லையெனில் அவர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாடு கடத்தப்படுவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆப்கன் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேற போதுமான கால அவகாசம் வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆப்கன் நாட்டினரை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாள்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.

ஆனால் இந்த தகவலை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை என்று ஏஆர்ஒய்(ARY) செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதும், அந்நாட்டில் இருந்து சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.