மனித உரிமை மீறல் வழக்கு: நெதா்லாந்தில் டுடோ்த்தே!

தி ஹேக்: பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு எதிராக ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல் வழக்கு விசாரணைக்காக நெதா்லாந்தின் தி ஹேக் நகருக்கு அவா் புதன்கிழமை அழைத்துவரப்பட்டாா்.
அந்த நீதிமன்றம் பிறப்பித்திருந்த கைது உத்தரவின் அடிப்படையில், ஹாங்காங்கில் இருந்து பிலிப்பின்ஸ் திரும்பிய அவரை மணிலா விமான நிலையத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடந்த 2011 முதல் 2019 வரை நாட்டின் அதிபராக இருந்த டுடோ்த்தே, போதைப் பொருளுக்கு எதிரான போா் என்ற பெயரில் ஏராளமானோரை படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடா்பாக சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அவா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.