கிராண்ட்பாஸ் இரட்டை கொலை சம்பவம் – அதிரடியாக கைது செய்யப்பட்ட 8 பேர்

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் ஜபோஸ்லேன் பகுதியில் சமீபத்தில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை (15) அதிகாலையில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நேற்று (16) இரவு வெல்லம்பிட்டி பகுதியில் 16 முதல் 44 வயதுக்குட்பட்ட குழுவொன்றை பொலிஸார் கைது செய்ததுடன், சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கத்திகள் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி போன்றவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.