;
Athirady Tamil News

யாழில் ஐஸ்கிறீம் விற்பனைக்கு வைத்திருவருக்கு 135,000 ரூபா தண்டம்

0

யாழ்ப்பாணம் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வையில் , அங்கா​டி உணவகங்கள் மற்றும் தேநீர்சாலை என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் ம.அனுசூதனன் தலைமையிலான குழுவினரால் கடந்த (12) திகதி அங்கா​டி பரிசோதிக்கப்பட்டன.

பழுதடைந்த குளிர்சாதன பெட்டி
இதன்போது கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள அங்கா​டியில், குளிர்சாதன பெட்டியில் உரிய வெப்பநிலை பேணப்படாமல், அதில் வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிறீம்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

இதையடுத்து ஐஸ்கிரீகளை உரியமுறையில் பேணாத அங்கா​டி முகாமையாளருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு திங்கட்கிழமை (17) திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான், அங்கா​டி முகாமையாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு 135,000 ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.