பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மஹர நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரபத்கொட பகுதியில் உள்ள அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆவணங்கள் தயாரித்து விற்றதாக பிரசன்ன ரணவீர மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.