இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றசாட்டில் 3 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு படகொன்றில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, கடக்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்பட்டுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.