இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல்

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்காக, இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏனைய சபைகளுக்கான வேட்புமனு நாளை செய்யப்பட உள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.