;
Athirady Tamil News

திரும்பப் பெறப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு

0

முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.

சட்டத்தரணி டிமிட்ரி ஷிராஸ் அகஸ்டஸ் பியட்ராங்கேலி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

2023, நவம்பர் 8, அன்று நடந்த நாடாளுமன்ற அமர்வின் போது ரணசிங்க, நீதிமன்ற அவமதிப்பு நடத்தையில் ஈடுபட்டார் என்று கூறியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தகவல்கள் இல்லை
எனினும், வழக்கு திரும்பிப் பெறப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.