கடலில் மூழ்கிய படகினை நோன்புடன் கடும் போராட்டத்தில் மீட்டெடுத்த கல்முனை ஆழ்கடல் சுழியோடி

கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய படகினை கடும் போராட்டத்தின் மத்தியில் கல்முனை ஆழ்கடல் சுழியோடிகள் அணியினர் மீட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (18) காலை இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய படகு ஒன்று திடிரென கடம் காற்று காரணமாக கடலில் மூழ்கியிருந்தது.இச் சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய கடல் பகுதியில் இடம்பெற்றிருந்ததுடன் குறித்த பாரிய படகினை மீட்டு கடற்கரைப் பகுதிக்கு இழுத்து கொண்டு வருவதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் எடுக்கப்பட்டிருந்தன.
குறித்த படகானது கடற்கரையில் நங்கூரமிட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் விழுந்து மூழ்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டனர்.இவ்வாறு மூழ்கிய படகு சுமார் 65 லட்சத்துக்கும் பெறுமதியானதுடன் இப்படகு கல்முனை பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளது.
தொடர்ந்து கடற்கரைப்பகுதில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ள குறித்த படகினை மீட்பதற்கான மற்றுமொரு முயற்சியாக இலங்கை கடற்படையினரின் உதவியும் கோரப்பட்ட பொதிலும் அவர்களின் உதவி கைகூடவில்லை.இருப்பினும் நோன்புடன் கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணியினர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பாரிய படகினை மீட்டு கடற்கரை பகுதிக்கு மாலை இழுத்து வந்தனர்.பின்னர் கரைக்கு இழுத்து வரப்பட்ட குறித்த படகு கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுப்பதற்கான முயற்சிகளை அப்பகுதி மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த படகில் பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் வலைகள் உட்பட பல உபகரணங்கள் இருந்த நலையில் அவை சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.