;
Athirady Tamil News

யாழில்.இ.போ.ச மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

2ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த ராஜலிங்கம் கேசவன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி செம்மணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பேருந்து , அவரை முந்தி செல்ல முற்பட்ட வேளை , பேருந்து மோதி படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.