;
Athirady Tamil News

பாதசாரி கடவையில் மாணவியை மோதிய மோட்டார் சைக்கிள்

0

பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில், ஒன்பது வயது மாணவி ஒருவர் படுகாயமடைந்து டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து, நேற்று முன்தினம் (20) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன்-குடாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை பாதிரியார் ஒருவர் ஓட்டிச் சென்றதாகவும், விபத்தில் பாதிரியார் காயமடைந்து டிக்கோயா-கிளங்கன் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான விசாரணையில், பாதிரியார் தனது மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் கவனக்குறைவாக ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக ஹட்டன் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.