;
Athirady Tamil News

100 வருட பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் நாய் உயிரிழப்பு

0

100 வருட பழமையான கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த போது, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய நாய் உயிரிழந்துள்ளது.

நாய் உயிரிழப்பு
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஃபிரோசாபாத்தில் சதார் பஜாரில் 100 ஆண்டுகள் பழமையான கட்டடம் ஒன்று இருந்தது.

இந்த கட்டடத்திற்கு சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அதன் நிலை மிகவும் மோசமடைந்தது.

இந்த பஜார் வழியாக மக்கள் அதிகமானோர் நடந்து செல்வார்கள். இந்நிலையில், இந்த கட்டடம் இடிந்து விழுந்து புகை போன்று சூழ்ந்தது.

இந்த சம்பவம் நடைபெற்ற அன்று தெருநாய் ஒன்று தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடியது. அப்போது, கட்டட இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக நாய் உயிரிழந்தது.

தற்போது இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.