;
Athirady Tamil News

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் மூத்த அரசியல் தலைவர் பலி!

0

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த அரசியல் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவின் கான் யூனிஸ் பகுதியின் மீது நேற்று முன்தினம் (மார்ச் 22) நள்ளிரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் போராளிக்குழுவின் மூத்த அரசியல் தலைவரும் பாலஸ்தீன நாடாளுமன்றத்தின் உறுப்பினருமான சலாஹ் பர்தாவில் (வயது 65) மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு நேற்று (மார்ச் 23) அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹமாஸின் முக்கிய கூட்டாளிகளாகக் கருதப்படும் யேமன் நாட்டைச் சேர்ந்த போராளிக்குழுவினர் இஸ்ரேல் மீது மற்றொரு ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகின்றது.

இதனால், அந்நாடு முழுவதும் அபாய சங்கு ஒலித்த நிலையில் அந்த ஏவுகணையைத் தகர்த்துவிட்டதாகவும் அதனால் எந்தவொரு உயிர் மற்றும் பொருள் சேதங்களும் ஏற்படவில்லை என இஸ்ரேல் நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து காஸா மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இதனால், இஸ்ரேல் மீதான தனது தாக்குதலை யேமனின் ஹவுதி படையினர் மீண்டும் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.