சாமர சம்பத் தசநாயக்க கைது; பிணையில் செல்ல அனுமதி

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாமர சம்பத் தசநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (27) விசாரணை நடத்தியது.
சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
சாமர சம்பத் தசநாயக்க பிணையில் செல்ல அனுமதி
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.