குளிர்பானத்துக்குள் மண்ணெண்ணையா ; தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடவினை கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு பதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் சோடா ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். சோடாவினை குடித்தபோது சோடாவில் இருந்து மண்ணெண்ணை மணம் வந்துள்ளது.
விற்பனை நிலையங்களில் சோதனை
அதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு குறித்த நபர் சோடாவுடன் நேரில் சென்று முறைப்பாடு வழங்கியுள்ளார்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனை பரிசோதகர்கள் குறித்த விற்பனை நிலையத்தினை சோதனை செய்து கலப்படம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சோடாவினை கைப்பற்றியுள்ளனர்.
மண்ணெண்ணை கலக்கப்பட்டு இருக்கின்றது என சந்தேகிக்கப்படும் சோடாவின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளது. அத்தோடு குறித்த சோடாவினை விற்பனை செய்த விற்பனையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து அதே பகுதியில் உள்ள ஏனைய விற்பனை நிலையங்களிலும் சுகாதார பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.