பயணித்துக்கொண்டிருக்கையில் பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

நுகேகொடை நகரத்தில் இன்று (28) பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அதேவேளை தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று இன்று (28) பிற்பகல் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.