;
Athirady Tamil News

நீச்சல் தடாகத்தில் பலியான சுற்றுலா பயணி ; விசாரணைகள் ஆரம்பம்

0

பெந்தொட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராஹேன பிரதேசத்தில் சுற்றுலா களியாட்ட விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

83 வயதுடைய ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடுவாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.