பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கையில் 7.5 சதவீத பாடசாலை மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் அதிகமாக கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் இந்த நிலைமை ஏற்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்துள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டுகிறது.
இது பெற்றோர்- மாணவர்களின் உறவுகளில் குறைவு போன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்பதை இந்த கணக்கெடுப்பு உறுதிப்படுத்தியுள்ளது.