;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

0

விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மட்டக்களப்பு – மூதூர் பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாரதிபுரம் பகுதியில் வைத்து இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த இளைஞன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.