;
Athirady Tamil News

சிறையில் மெத்தை கேட்ட எம்.பி ; பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, உறங்குவதற்கு மெத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் அவரது கோரிக்கை வைத்தியர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

முதுகு வலி இருப்பதனால் தனக்கு மெத்தை வழங்குமாறு அவர் கோரியுள்ளதுடன், அதற்கமைய அவரை வைத்தியர்களிடம் பரிந்துரைக்கப்பட்ட பின்னர் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு மெத்தை தேவைப்பட்டால் அவரது முதுகு வலிக்கு அவர் பெற்ற சிகிச்சை குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் அதை சிறப்பு வைத்தியர்களிடம் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் இது தொடர்பாக கவனம் செலுத்தலாம் என வைத்தியர்கள் கூறியுள்ளதாகவும் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.