;
Athirady Tamil News

கொழும்பில் ஏற்படவுள்ள மாய நிகழ்வு – வானிலை நிபுணர் விடுத்துள்ள தகவல்

0

கொழும்பில் சூரியன் உச்சம் பெறவுள்ளதால், மக்களின் நிழல் மறைந்துவிடும் என வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதி மதியம் 12.12 மணிக்கு சிறிது நேரம் நிழல் மறைந்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவொரு ஒளியியல் மாயை நிகழ்வாகும். ஆண்டின் இந்த நேரத்தில், அதிகபட்ச சூரிய சக்தி பெறப்படுகிறது.

சூரியன் உச்சம்
ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் சூரியன் நம் நாட்டின் மீது உச்சத்தில் இருக்கும். இந்த உச்சம் ஏப்ரல் மாதம் 5 முதல் 15ஆம் திகதி வரை நீடிக்கும்.

ஏப்ரல் 7 ஆம் திகதி கொழும்பில் சூரியன் உச்சத்தில் இருக்கும். அன்று மதியம் 12.12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும். அவர்களால் தங்கள் சொந்த நிழலைப் பார்க்க முடியாது. வேறு யாராவது அதைப் பார்க்க முடியும்.

இந்த நிலைமை 4 முதல் 15 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நீடிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.