;
Athirady Tamil News

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த சிசு மரணம்: உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

0

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் சிசு ஒன்று, அரை மணி நேரத்தில் மரணமடைந்த நிலையில், மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிசுவின் உடற்கூற்று மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதி புத்தூர் மேற்கைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குழந்தை பிறந்து அரைமணி நேரத்திலேயே இறந்துள்ளது.
மரணத்துக்கான காரணம் தெரியாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மரண விசாரணைகளை யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.