;
Athirady Tamil News

இரண்டு வயது சிறுவனின் உயிரை பறித்த அரச பேருந்து

0

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இரண்டு வயது சிறுவன் ஒருவர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதி உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், இன்று (02) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் வஸ்கடுவ காலி வீதியைச் சேர்ந்த இரண்டு வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்றும் களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.