;
Athirady Tamil News

தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு தேசிய மக்கள் சக்தி மட்டுமே தீர்வு காணும்

0

நீண்ட காலமாக தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு தேசிய மக்கள் சக்தி மட்டுமே தீர்வு காணும் என யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்

தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாகத்தை நவாலிப் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஒரு பயிரை விதையிட்டு வளர்த்து பின்னர் பூத்து காய்தா கனி தரும் வரை மக்கள் அந்த பயிரை பாதுகாத்து பலன் பெறுவர். அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் கனிகளைப் பெறும் வரை மக்கள் ஆதரவு தந்து அதன் பயனைப் பெற வேண்டும்.

இந்த முறையும் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து கிராமங்களை எம்முடன் இணைந்து மேம்படுத்து வேண்டும் என தெரிவித்தார்.

மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் சுரேன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நவாலி பிரதேச சபை வேட்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.