;
Athirady Tamil News

வீழ்ந்தது அமெரிக்க பங்குச் சந்தை!

0

உலக நாடுகள் மீது அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள அதிரடி வரி விதிப்பு காரணமாக சா்வதேச பொருளாதரச் சூழல் அடியோடு மாறிவருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டனா். இதன் விளைவாக அந்த நாட்டுப் பங்குச் சந்தை வியாழக்கிழமை கடும் வீழ்ச்சியடைந்தது. பங்குச் சந்தையின் அனைத்து குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. வா்த்தகத்தின் இடையில் ஆப்பிள், என்விடியா ஆகிய இரு பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் 47,000 கோடி டாலரை (சுமாா் ரூ.40 லட்சம் கோடி) இழந்திருந்தன.

டாலா் மதிப்பு சரிவு: இதற்கிடையே, மற்ற முக்கிய நாணயங்களுக்கு நிகரான டாலா் மதிப்பு வியாழக்கிழமை முந்தைய ஆறு மாதங்கள் காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. வியாழக்கிழமை காலை அதன் மதிப்பு 2.2 சதவீதம் சரிந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.