;
Athirady Tamil News

டயர் திடீரென வெடித்ததில் லொறி விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

0

குருணாகல் தம்புள்ள பிரதான வீதியில் இப்பாகமுவ பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த லொறியின் டயர் திடீரென வெடித்ததில் லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றையதினம்(4)அதிகாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் லொறியில் பயணித்தவர்கள் சிறு காயத்துக்குள்ளாகியுள்ளதோடு, அருகில் உள்ள மின் கம்பமும் சேதமடைந்துள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.