;
Athirady Tamil News

இ-பாஸ்போர்ட்டில் இனி சிப் பொருத்தம் – மத்திய அரசு முக்கிய தகவல்

0

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இ-பாஸ்போர்ட்
கைரேகை ஆதாரத்துடன் கூடிய சிப் உள்ளடக்கிய இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தருமர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

மத்திய அரசு தகவல்

அதில் சென்னை, ஐதராபாத், நாக்பூர், புவனேஷ்வர், ஜம்மு உள்ளிட்ட பல்வேறு மண்டல அலுவலகங்களில் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பல பாஸ்போர்ட் அலுவலகங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.

சென்னையில் உள்ள பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 20,729 பேருக்கு இ-பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய குடிமக்கள் வெளிநாட்டிற்கு செல்லும்போது விமான நிலையங்களில் உள்ள இமிக்ரேஷன் கவுன்டர்களில் பல மணிநேரம் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.