;
Athirady Tamil News

மீண்டும் போர்? தெற்கு சூடான் அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை!

0

தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் துவங்கும் அபாயம் நிலவுவதால் அந்நாட்டு அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ரெயிக் மச்சார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து அரசு படைகளுக்கு கிளர்ச்சிப்படைகளுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் தெற்கு சூடான் அரசுக்கு ஆதரவாக உகாண்டா தனது படைகளை அந்நாட்டுக்கு அனுப்பி வைத்தது. மேலும், அந்நாட்டில் மீண்டும் உள்நாட்டுப் போர் துவங்கும் சூழல் நிலவி வருகின்றது.

இந்நிலையில், தலைநகர் ஜூபாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனி நேற்று முன்தினம் (ஏப்.3) தெற்கு சூடான் அதிபர் சால்வா கிர்ருடன் கலந்து உரையாடியுள்ளார். மேலும், அந்நாட்டு அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு சூடான் வெளியுறவுத் துறை அமைச்சர் முஹம்மது அப்தல்லா கோக் கூறுகையில், மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி அமைதியை நிலைநாட்டும் என அந்நாட்டின் அரசு அதிபர் முசேவேனிக்கு உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரானது கடந்த 2018-ம் ஆண்டு உகாண்டா நாடு முக்கிய பங்கு வகித்த ஒப்பந்ததின் அடிப்படையில் முடிவு பெற்றது.

கடந்த மார்ச் மாதத் துவக்கத்தில் ரெயிக் மச்சாரின் அதாரவுப் படைகள் மேல் நைல் மாநிலத்தில் சிக்கித் தவித்த அரசுப் படைகளை மீட்க வந்த ஐ.நா. ஹெலிகாப்டரின் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனால், ஜெர்மனி மற்றும் நார்வே உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தெற்கு சூடான் தலைநகரிலுள்ள தங்களது தூதரகங்களை தற்காலிகமாக மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.