இந்திய பிரதமர் மோடிக்கு “மித்ர விபூஷன” பட்டம் வழங்கிய இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பிரதமர் மோடிக்கு “மித்ர விபூஷன” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) கைச்சாத்திடப்பட்ட போதே இந்த பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மித்ர விபூஷண விருது- மோடி பெருமிதம்
இந்திய பிரதமர் மோடி உத்ட்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
வெளிநாட்டு அரச தலைவருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான’மித்ர விபூஷண பட்டத்தை அவருக்கு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார வழங்கி கௌரவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் ‘இலங்கை மித்ர விபூஷண’ விருது எனக்கு வழங்கப்பட்டது பெருமைக்குரிய விடயம் ஆகும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.