;
Athirady Tamil News

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம்

0

மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறையில் இருந்த கணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கணவருக்கு சிறை தண்டனை
இந்திய மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவை சேர்ந்த தம்பதியினர் சுரேஷ் மற்றும் மல்லிகே.

இவர்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டில் தனது மனைவியை காணவில்லை என்று சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பின்னர், மைசூர் மாவட்டத்தில் உள்ள பெட்டடபுரா காவல் நிலைய எல்லையில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு கிடைத்தது. அது காணாமல் போன மல்லிகேவின் உடலாக இருக்குமா என்று பொலிஸார் சந்தேகித்தனர். பின்னர், உடலை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் சுரேஷை வலியுறுத்தினர்.

ஆனால், மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சுரேஷ் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சுரேஷ் சிறையில் இருந்தார். இதையடுத்து, டிஎன்ஏ பரிசோதனையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் மல்லிகேவின் உடல் என்று நிரூபிக்கப்படாததால் அவர் ஜாமினில் வெளியில் வந்தார்.

இந்நிலையில், ஒரு உணவகத்தில் மல்லிகே அவரது ஆண் நண்பருடன் சாப்பிட்டு கொண்டிருப்பதை சுரேஷ் பார்த்துள்ளார். பின்னர், பொலிஸாரால் மல்லிகே கைது செய்யப்பட்டார். காதலனுடன் மல்லிகே வாழ்ந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.