;
Athirady Tamil News

சிறுமியின் உயிரை பறித்த கார் ; விளையாட்டின் போது வந்த வினை

0

மஹாபாகே பொலிஸ் பிரிவின் வெலிசர பகுதியில், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த மூன்று சிறுவர்களில் ஒருவர் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஏனைய இரண்டு சிறுவர்களும் பலத்த காயமடைந்து றாகம வைத்தியசாலையில் உள்நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர் வெலிசர, றாகம பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியாவார்.

விபத்துக்குப் பிறகு, காரின் ஓட்டுநர் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், சாரதியை கைது செய்வதற்காக மஹாபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.