;
Athirady Tamil News

6 அடி பேருந்தில் கண்டக்டர் வேலை பார்க்கும் 7 அடி உயரமுள்ள இளைஞர் கழுத்து வலியால் அவதி

0

6 அடி பேருந்தில் 7 அடி உயரமுள்ள இளைஞர் கண்டக்டர் வேலை பார்ப்பதால் கழுத்து வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

இளைஞர் புலம்பல்
இந்திய மாநிலமான தெலங்கானா, சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த 2021-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், கருணை அடிப்படையில் அவரது மகனுக்கு கண்டக்டர் வேலை கொடுக்கப்பட்டது.

ஆனால், கண்டக்டர் வேலை வழங்கப்பட்ட அமீன் அகமது அன்சாரி 7 அடி உயரம் இருக்கிறார். இதனால், 6 அடி உயரமுள்ள பேருந்தில் வேலை செய்யும் போது அவருக்கு கழுத்து வலி ஏற்படுகிறது.

அதாவது, தினமும் சுமார் 10 மணி நேரம் தலை குனிந்த படி வேலை செய்து வருவதால் அவர் மீது பயணிகள் பரிதாபம் காட்டுகின்றனர்.

இவருக்கு கழுத்து, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதால் அடிக்கடி மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் பேருந்து பயணிகளிடம் புலம்பி வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு போக்குவரத்து கழக பணிமனையில் வேறு பணி வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் வேறு வேலை வழங்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.