;
Athirady Tamil News

யாழில் போதை மாத்திரையுடன் சிக்கிய இளைஞன் ; வீட்டை சோதித்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் யாழ். மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். நகர் பகுதியில் போதை மாத்திரைகளின் பரவல் அதிகரித்திருப்பதாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் கிடைத்த தகவலுக்கு அமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஐந்து சந்திப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது 75 போதை மாத்திரைகள் அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.