;
Athirady Tamil News

அமெரிக்கவின் பிரபல நடனக் கலைஞரை விடுதலை செய்தது ரஷ்யா

0

கைதிகள் பரிமாற்ற முறையில் தங்கள் நாட்டுச் சிறையில் இருந்த அமெரிக்க நடனக் கலைஞா் செனியா கரோலினாவை ரஷ்யா விடுதலை செய்துள்ளது.

அமெரிக்கரை மணந்ததன் மூலம் அந்த நாட்டுக் குடியுரிமையைப் பெற்ற ரஷ்யரான கரேலினா, ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவும் தொண்டு நிறுவனத்துக்கு 52 டொலா் நன்கொடை அளித்ததற்காக, தேசத் துரோக குற்றச்சாட்டில் பேரில் அவரை ரஷ்ய அரசு கடந்த 2024 பெப்ரவரியில் கைது செய்தது.

இந்த நிலையில், அபுதாபியில் வியாழக்கிழமை நடைபெற்ற கைதிகள் பரிமாற்றத்தில் மூலம் அவா் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மின்னணு நுண்பொருள்களை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவால் கடந்த 2022-இல் கைது செய்யப்பட்ட ஜொ்மன்-ரஷ்ய இரட்டை குடியுரிமை பெற்ற ஆா்தா் பெட்ரோவும் இந்த கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.