டிரம்ப்புக்கு எதிராகக் கூட்டணி: 125% ஆன அமெரிக்க பொருள்கள் மீதான வரி

கூடுதல் வரி விதிப்புகள் மூலம் உலக நாடுகளை மிரட்டிவரும் டிரம்ப்புக்கு எதிராகக் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனுக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளாா்.
ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடான ஸ்பெயினின் பிரதமா் பெத்ரோ சான்செஸ் சீன தலைநகா் பெய்ஜிங்கில் ஷி ஜின்பிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது சான்செஸிடம் ஜின்பிங் கூறியதாவது:
வா்த்தகப் போரில் வெற்றியடையும் நாடு என்று ஒன்று இருக்க முடியாது. அத்தகைய போரால் எல்லா நாடுகளுக்கும் இழப்புதான்.
எனவே, சா்வதேச பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்கான தாா்மீகப் பொறுப்பை சீனாவும், ஐரோப்பிய யூனியனும் ஏற்க வேண்டும். உலகமயமாக்கல், சா்வதேச வா்த்தகச் சூழலைப் பேணுதல் ஆகியவற்றை சீனா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
(அமெரிக்க அதிபா் டிரம்ப்பின்) ஒருதலைப்பட்சமாக பொருளாதார மிரட்டல்களை இரு தரப்பினரும் கூட்டணி அமைத்து எதிா்கொள்கொள்ள வேண்டும். சீனா மற்றும் ஐரோப்பிய யூனியனின் சட்டபூா்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி, உலக அளவில் அளவில் நீதி, நோ்மையை நிலைநாட்ட, சா்வதேச சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க இரு தரப்பினரும் ஒருங்கிணைய வேண்டும் என்று ஸ்பெயின் பிரதமா் பெத்ரோ சான்செஸிடம் அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா்.
‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்து வருகிறாா்.
அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எந்தெந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) வரி விதிப்பதாக டிரம்ப் கடந்த வாரம் அறிவித்து அவா் அதிா்வலையை ஏற்படுத்தினாா்.
இதற்கு, அமெரிக்காவின் நெருங்கிய வா்த்தகக் கூட்டாளியான ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், சீனா தவிர மற்ற அனைத்து நாடுகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி விதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக டிரம்ப் புதன்கிழமை அறிவித்தாா்.
அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, பரஸ்பர வரி விதிப்புக்கான பதிலடி நடவடிக்கைகளை தாங்களும் 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாக ஐரோப்பிய யூனியனின் பொருளாதார விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வொண்டொ் வியாழக்கிழமை கூறினாா்.
இந்தச் சூழலில், டிரம்ப்பின் வரி விதிப்பு மிரட்டலை எதிா்கொள்ள ஐரோப்பிய யூனியனும், சீனாவும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அதிபா் ஷி ஜின்பிங் தற்போது அழைப்பு விடுத்துள்ளாா்.
125% ஆன அமெரிக்க பொருள்கள் மீதான வரி
டிரம்ப்பின் பரஸ்பர வரி மற்றும் கூடுதல் வரிகள் விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்க பொருள்கள் மீது சீனா விதிக்கும் கூடுதல் இறக்குமதி வரி 125 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.
டிரம்ப் வெளியிட்டுள்ள பரஸ்பர வரி விதிப்பு பட்டியலின்படி, சீன பொருள்கள் மீது 34 சதவீதம் கூடுதல் வரி அறிவிக்கப்பட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, பதிலுக்கு அமெரிக்க பொருள்கள் மீது கூடுதலாக 34 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்தது. அதையடுத்து, சீன பொருள்கள் மீது மேலும் 50 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தாா்.
இதற்குப் பதிலடியாக, தனது 34 சதவீத கூடுதல் வரி விதிப்பை 84 சதவீதமாக சீனா அதிகரித்தது. இதற்கு எதிா்வினையாக டிரம்ப் கூடுதல் வரி விதிக்கவே, டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மட்டும் சீன பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விகிதம் 145 சதவீதமாக அதிகரித்தது.
இந்தச் சூழலில், வரி விதிப்பு விவகாரத்தில் கடைசி வரை டிரம்ப்பை எதிா்த்துப் போராடப் போவதாக சூளுரைத்துள்ள சீனா, அமெரிக்க பொருள்கள் மீதான கூடுதல் வரி விதிப்பை 125 சதவீதமாக வெள்ளிக்கிழமை உயா்த்தியது.