மனைவி கொடூர கொலை ; பொலிஸாரிடம் கணவன் செய்த செயல்

அலுத்கம பொலிஸ் பிரிவின் குருந்துவத்த தர்கா நகரப் பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் குருந்துவத்த தர்கா டவுன் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
குடும்ப தகராறு
கொலைக்குப் பிறகு, இறந்தவரின் கணவர் கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதத்துடன் பொலிஸாரிடம் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக இறந்தவரின் கணவர் இந்தக் கொலையைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருந்துவத்த தர்கா டவுன் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்.
இந்த சம்பவம் குறித்து அலுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.