;
Athirady Tamil News

இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பலர் காயம்; மதிலை உடைத்து சென்ற பேருந்து

0

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது.

அதிக வேகத்துடன் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரம் மற்றும் வீடொன்றின் மதில் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் சாரதியின் கனவக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.