உக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலில் 32 பேர் பலி

உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் 84 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு உக்ரேனில் உள்ள சுமி நகரத்தின் மீது ரஷ்யா ஏவுகணைக் குண்டுகளை வீசியதாக யுக்ரேன் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தத் தாக்குதலுக்கு உக்ரேன் ஜனாதிபதி கண்டனம் வெளியிட்டுள்ளார்.