;
Athirady Tamil News

வவுனியா விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் காயம்

0

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூந்தோட்டம் பாடசாலை திசையில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளுடன் எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார்சைக்கிள்களில் பயணித்த இரு பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் விபத்து முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.